Ujirppu - Tamil News
No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்
No Result
View All Result
Ujirppu News
No Result
View All Result
Home Breaking News

மல்லாவியை சேர்ந்த காதல் மனைவியை மீட்டுத் தாருங்கள்: வவுனியாவில் 200 அடி கோபுரத்தில் ஏறி காதலன் போராட்டம்;

10 months ago
in Breaking News, இலங்கை, செய்திகள், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
300
VIEWS
Share on FacebookShare on Twitter

மல்லாவியை சேர்ந்த காதல் மனைவியை மீட்டுத் தாருங்கள்: வவுனியாவில் 200 அடி கோபுரத்தில் ஏறி காதலன் போராட்டம்; வவுனியா தேக்கவத்தை பகுதியில் 200 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.தான் காதலித்த பெண்ணை பதிவு திருமணம் செய்த நிலையில், யுவதியின் பெற்றோர் அவரை கடத்தில் சென்று விட்டதாகவும், காதல் மனைவியை மீட்டுத்தரக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளார்.

தேக்கவத்தையை சேர்ந்த 19 வயதான உபாலி வீரசேகரகே நிசாந்த வீரசேகர என்ற  இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த 18 வயதான சதுஜா என்பவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார்.பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு ஏற்றிச் சென்றனர்.

பார்வையிடாது

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

5 வயது சிறுமியை காணவில்லை..!

தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் குறித்த இளைஞர் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன்,கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகைதந்திருந்தனர். எனினும் பொலிசார் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் பொலிசாருடன் முரண்பட்டதுடன் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

காதலியை அழைத்து வருவதாக தீயணைப்பு துறையினர் கூறியதையடுத்து கீழே இறங்கிய இளைஞன், பின்னர் மீண்டும் ஏறிக் கொண்டு விட்டார். 200 அடி உயரத்தில் அவர் ஏறி நிற்கிறார்.இளைஞனிற்கு துணையாக மைத்துனனும் கோபுரத்தில் ஏறினார். பின்னர் அவர் கீழே இறக்கப்பட்டார்.

காதலனை மீட்பதற்காக மற்றும் இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியநிலையில் அவர்களது முயற்சியும் பலனிளிக்கவில்லை.பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லையென கூறி, காதலனின் உறவினர்கள் வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Previous Post

இத்தாலியில் இடம் பெற்ற கொடூரம் தலைமறைவான இலங்கைப் பெண்

Next Post

இவரைக் கண்டு பிடித்தால் 25 லட்சம் ரூபாய் பொலிஸாரின் அவசர அறிவிப்பு

மேலும் செய்திகள்

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!
இலங்கை

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

8 hours ago
5 வயது சிறுமியை காணவில்லை..!
இலங்கை

5 வயது சிறுமியை காணவில்லை..!

8 hours ago
14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!
இலங்கை

14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

8 hours ago
போதைப் பொருள் கடத்திய 3 இளைஞர்கள் பொலிஸாரால்  கைது..!
இலங்கை

போதைப் பொருள் கடத்திய 3 இளைஞர்கள் பொலிஸாரால் கைது..!

8 hours ago
மின் கட்டணம் உயர்வு..!
இலங்கை

மின் கட்டணம் உயர்வு..!

12 hours ago
இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார் – பதுளையில் சம்பவம்..!
இலங்கை

இலங்கையில் இளைஞர்களை கடத்திய பொலிஸார் – பதுளையில் சம்பவம்..!

12 hours ago
Next Post
இவரைக் கண்டு பிடித்தால் 25 லட்சம் ரூபாய் பொலிஸாரின் அவசர அறிவிப்பு

இவரைக் கண்டு பிடித்தால் 25 லட்சம் ரூபாய் பொலிஸாரின் அவசர அறிவிப்பு

கனடாவில் அமைச்சரானார் தமிழ் பெண்மணி  மகிழ்ச்சியில் தமிழர்கள்

கனடாவில் அமைச்சரானார் தமிழ் பெண்மணி மகிழ்ச்சியில் தமிழர்கள்

ஏனைய செய்திகள்

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடனான கப்பல் இன்று இலங்கை வருகை ..!

August 11, 2022
5 வயது சிறுமியை காணவில்லை..!

5 வயது சிறுமியை காணவில்லை..!

August 11, 2022
14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

14 வயதுடைய பாடசாலை மாணவர் கார் மோதி உயிரிழப்பு ..!

August 11, 2022

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

பெயர் : திரு கந்தையா யோகராஜா
முகவரி : அரியாலை, பரிஸ், France, Callantsoog, Netherlands, Lewisham, United Kingdom

இறந்த திகதி : 14 Jun, 2021

மரண அறிவித்தல்

பெயர் : திருமதி இராசம்மா மார்க்கண்டு
முகவரி : அனலைதீவு, கிளிநொச்சி, Bondy, France
மறைவு : 21 May, 2021
Ujirppu - Tamil News

Developed by SS Creation Design

Navigate Site

  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Follow Us

No Result
View All Result
  • பிரதான செய்திகள்
  • முக்கிய செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • செய்திகள்
  • உலகம்

Developed by SS Creation Design

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In