கிளிநொச்சி கோனாவில் கிராமத்தில் யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கிளிநொச்சி கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வசந்தகுமார் டீலக்சியா என்ற மாணவியே வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டில் தூக்கிட்டு இருந்த நிலையில் சகோதரனால் மீட்கபட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்துள்ளார்.
உடல் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.