சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி பொலிஸாரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்.
இதேவேளை நடிகை விஜயலட்சுமி சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தியும் வந்தார்.

இவ்வாறான நிலையில், வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்திற்கு வந்த நடிகை விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக நடிகை விஜலட்சுமி தெரிவித்தாவது,
சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, அவர் சக்திவாய்ந்தவராக இருக்கிறார்.

பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக என்னால் போராட முடியவி்ல்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை.
புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொய்வு இருந்தது. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.

தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும், மீண்டும் பெங்களூருவுக்கே திரும்ப புறப்படுகிறேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.